உன்னைக்காணாமல் ஏங்கும் விழிகளுக்கு
உறக்கமாக.. நீ எப்போது வருவாய்
உன் பெயர் சொல்லும் இதழுக்கு
முத்தமாக.. நீ எப்போது வருவாய்
உன் நினைவால் வாடும் மனதிற்கு
சாமரமாக.. நீ எப்போது வருவாய்
உன் மூச்சுக்காற்றை சுவாசிக்க
என் அருகில்.. நீ எப்போது வருவாய்
உன் கூந்தல் மலரும் என்னை
கேலி பேசாமல்.. நீ எப்போது வருவாய்
உன் கால் கொலுசும் என்னைக்கண்டு
ஒலியாமல்.. நீ எப்போது வருவாய்
உன் சிங்காரச் சிரிப்பும் என் காதோரம்
ஒலிக்க.. நீ எப்போது வருவாய்
உன் அணைப்பில் என்னை மறக்க
என்னுள்.. நீ எப்போது வருவாய்
உன் நினைவால் வாடுவது நானல்ல
என்னுள் இருக்கும் நீ தான்..
இனியும் என்னை வாட்டாதே
என் இனியவளே.. வந்துவிடு என்னிடம்..

No comments:
Post a Comment