Sunday, December 12, 2010

கனவு



கனவு

உன்னுடன் பேசிய சில மணித்துளிகள்
என் வாழ்வின் பொக்கிஷமாகும் ..

அதிகாலை கனவின் விழித்தெழல்
அழகான பணிதுளிக்கனவாக ..

என் வாழ்நாளெல்லாம் என் நினைவில்
கனவு ஒரு முறை தானே வரும்

அதன் தாக்கம் நினைவில் எப்போதும்
மௌன சாட்சியாய் மனசாட்சி..

ஏன் அழுகிறாய் கண்களே..

மனதின் வலி கண்களால்..
தாங்க முடியவில்லையா ..

தாங்கும் சக்தி மனதிற்கு இல்லையா...

ஆறாத புண்ணுக்கு மருந்தானாயா கண்ணீரே..
நினைவுகள் மடிவதெப்போது..

கண்ணீர் வற்றும் போதா..
இதயம் நிற்கும் போதா..

No comments:

Post a Comment