எப்படி திரும்பிப்போவேன்
நடந்து நடந்து கால்கள் ஓய்ந்து விட்டன ..
மெதுவாக நின்று திரும்பிப்பார்க்கிறேன் ..
வெகுதூரம் வந்துவிட்டேனென்று..
நடக்கவே தெரியாத நான் ..
உன் கரம் பிடித்ததில் ..
எப்படி வந்தேன் இவ்வளவு தூரம் ..
கண்கள் இருட்டுகிறதே ஏன் .
நான் மட்டும் ஏனிங்கு தனியாக ..
எப்படி திரும்பி போவது .
ஐயோ என் கண்களில்...
கண்ணீரும் வற்றிவிட்டதே..
எப்படி திரும்பிப்போவேன் ..

No comments:
Post a Comment