அலை கடல்
மின்னலாய் நீ வருவதும் போவதும்
என்னதான் உன் கதை ..ஏன் இப்படி..
உன்னை எத்தனை முறை பாத்தாலும்
பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுதே ..
உன் இதமான காற்றின் குளுமை
என் உள்ளம் துடிப்பது உனக்கு ..
நன்றாகவே தெரியும் ..இருந்தும்
இந்த கண்ணாமூச்சிதான் புரியவில்லை..
உன்னைத்தானே நான் கேட்கிறேன்
அலையே ஒரு நிமிடம் ஓரிடத்தில் நில்லேன் ..

No comments:
Post a Comment