பாசம்
ஏய் ஓடாத நில்லு...
எங்காவது கால் தடுக்கபோகுது ..
கொஞ்சம் சும்மா இருங்களேன்..
எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க..
பார்த்தா பார்க்கட்டும்.....
நான்தான் உன் கதாநாயகன்னு
எல்லாருக்கும் தெரியும்....
ஒரு சிறு அணைப்பு
ஒரு இதழ் பதிப்பு...
இன்னும் கல்யாணத்திற்கு
பத்து நாள்தான் இருக்கு ..
எவ்வளவு வேலை இருக்கு
இப்படி தொல்ல பன்றிங்கலே ..
பேரன் பேத்தி எல்லாம் ..
கிண்டல் பன்றாங்க ..
பாட்டி தாத்தா ஏன் உன் பின்னாலேயே
சுத்துரார்னு கேட்கிறாங்க ..
ம்ம்.. ..

No comments:
Post a Comment