வாழ்க்கை
என் மீது உன் கோபம் தான் என்ன
உடை அழகு என்றேன்.....
என் அம்மா தேர்வு என்றாய்...
இத்தனை நளினம் உன்னிடம் தான்
நான் காண்கிறேன் என்றேன்...
அது என் அம்மாவால் வந்தது என்றாய்...
இத்தனை சிக்கனம் உன்னிடம்தான் என்றேன்
அது என் அம்மாவிடம் கற்றது என்றாய்...
எப்படி உன்னால் எல்லாம் சரியாக பேசமுடிகிறது என்றேன்
என் அப்பாவை பார்த்து நான் கற்றது என்றாய்..
நீ செய்யும் ஒவ்வொரு செயலுக்கும்
அப்பா அம்மா காரணம் என்றாய்..
இத்தனை செய்த அவர்கள் உன் வாழ்க்கை
துணையை சரியாகத்தானே தேர்வு செய்வார்கள் என்றேன் ..
நீயோ காதல் என்று சொல்லி என்னிடம்
கோபப்படுவதேன் ....
உன்னை செதுக்கிய அவர்கள்
உன் வாழ்கையை தெரிவு செய்ய மாட்டார்களா ..

No comments:
Post a Comment