அன்பின் ஆழம்
கால்கள் தன் நினைவற்று போகும் போக்கில்
போக்கிடம்தான் யார் அறிவார்
தேடுவது தெரியாத தேடல்கள்
நெஞ்சம் கனத்தாலும் கண்களில் வழியாமை..
ஏன் இந்த மாற்றம் தேடல்தான் என்ன
வாடுவது மனமா மனதின் வழி நினைவா ...
காயப்பட்ட மனதிற்கு மருந்துதான் என்ன
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்...
உன்னை நினைத்து உன் நினைவை நினைத்து
நித்தம் நிதம் உயிர் இழந்து..
இருப்பது உடல் மட்டுமே ..உன்னாலும்
இருப்பது உடல் மட்டுமே ..உன்னாலும்
உயிர்ப்பிக்க முடியாத தூரம் போய்விட்டேன்..
உயிரற்ற உடலை நேசிக்க நட்பு வட்டம்
அதை ஒரு இயந்திரத்தை போல சமர்ப்பித்துவிட்டேன்..
இன்னமும் கண்கள் உன்னை தேடுவதும்
காதுகள் உன் குரல் கேட்க துடிப்பதும்..
வியப்பான ஒன்றுதான் ..

No comments:
Post a Comment