உயிரானவன்
பேசாத எனக்கு வார்தையானவன் நீ
எழுதாத எனக்கு கவிதையானவன் நீ..
இனிப்பான மொழிகளுள் தமிழானவன் நீ
என் உள்ளம் கவர்ந்ததால் கள்வனானவன் நீ..
என் நன்மை தீமை உரைப்பதால் நண்பனும் நீ
என் சந்தேகங்களை தீர்ப்பதால் என் ஆசானும் நீ..
என் பசி தாகம் அறிவதால் என் தாயுமானவன் நீ
மௌனமான என் வாழ்கையில் வசந்தமானவன் நீ..
மொத்தத்தில் என் உயிரானவன் நீ....

No comments:
Post a Comment