குளிர் பேச்சு
கருமேகம் மறைந்து காற்றுப்போக்கில்
மழை பொழிந்துவிட்டு போவதுபோல்
நீ சென்ற பின்னரும் உன் குளிர் பேச்சு
என்னை மெய் சிலிர்க்க வைக்கிறதே
இதென்ன மாயம் ..
உன் நினைவாகவே இருக்க
நீ என்ன மாயம் செய்தாய்
உன் பேச்சு திறமையா
அல்லது உன் இதழ் முத்தமா .
இதென்ன மயக்கம் ..
பொழுது விடிவதே உனக்காக தானோ
ஏன் இவ்வளவு சந்தோசம்
இப்போதெல்லாம் நானும் அழகாகிவிட்டேன்
என் மனம் பாட்டெல்லாம் பாடுகிறது
இதென்ன மாற்றம்..
டேய் எந்த்ரிடா இன்னும் என்ன தூக்கம்
அம்மாவின் குரல் ..ஓ எல்லாம் கனவா
மீண்டும் கண்ணை மூடுகிறேன்
என்னவள் திரும்ப வருவாள் என்று
ஏனிந்த மாயம் ...

No comments:
Post a Comment