ஊடல்
ஊடல் சில நேரம்
கூடல் பல நேரம்
காட்சிகள் பல ஆயினும்
பார்வைகள் ஒன்றுதானே
இணைந்த மணங்கள் பிரயுமோ
பிரிந்த மணங்கள் கூடுமோ ..
சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகத்தான் எடை போடுமே ..
அதன் காரணம் உள்ளங்கள்தான் சேராததே ..
இழப்பென்பது நமக்குள் நாமே
நம்மை இழப்பதன்றோ ..
கொஞ்சம் கொழுப்பும் திமிரும்
எனக்கும் இருக்கு அன்பு தோழா
நெஞ்சம் முழுக்க உன்னை சுமந்த
கொழுப்பும் திமிரும்தான் அது....
உணர்ந்து நிமிர்ந்தால் வெகுதூரம்
நான் தனித்து விடப்பட்டது ..
என்னால் தவிப்பும் ....????
உன்னை முழுதாக நிச்சயம் நானறிவேன்
இத்தனை விளக்கமும் ஏன்..
சொல்ல தெரியவில்லை ..
என்னுடன் பேசவேண்டுமென்றோ.
என்னை பார்க்க வேண்டுமென்றோ
கண்டிப்பாக அல்ல ..
நான் இதுவரை உன்னை விட்டு பிரிந்ததே இல்லை .
இனியும் அப்படிதான் ..ஆனால் இனி
என் நினைவுகள் மட்டுமே ..
உன்னை சேரும் ..
என்றாவது ஒரு நாள்
என் தாக்கமும் உன்னை சேர்ந்தால்
உனக்காக நான் காத்திருப்பேன் ..
என் உள்ளம் உனக்கு தெரியும்..
உன் இதயம் கல்லென்று நீ சொன்னாலும்
அது குழந்தையென்று நானறிவேன் ..
பேசுகிறேன் நான் உன் இதயத்துடன்
புயலடித்தாலும் நான் பூக்கள் வீசுவேன்
முற்றுபுல்லிக்கு அருகில்
சின்ன புள்ளிகள் வைத்தால்
அது தொடருமல்லவா...
நம் உறவும் அதுபோலதான்
நாம் எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் இருவர் மனதிலும்
ஒருவரை ஒருவர் அழித்துவிட
கட்டாயம் முடியாது ....

No comments:
Post a Comment