Monday, December 6, 2010

தோழமை

தோழமை

இத்தனை நேரம் சூடாகிப்போன
மனமும் உடலும் மழைச்சாரலின்
இதமான காற்றுடன் கலந்த தூரலில்
குளிர்ந்தது தேகம்...

மனதிலோ சாரலின் சந்தோசம்
இன்னும் சற்று நேரம் இயற்கையின்
மடியிலேயே இருக்க உள்ளம் துடிக்கிறது ..

நிதானமாக நடந்தவைகளை யோசிக்கிறது மனம் ..

ஏன்..? ஏன் இப்படி செய்தாய் ..
நான் உனக்கு என்ன தவறு செய்தேன்
கல்லூரி காலங்களில் ஒன்றாக
சேர்ந்து சுற்றியதை மறந்துவிட்டாயா..

பேசியது ஒன்று கூடவா
உன் நினைவில் இல்லை
நானாக பேசியதை விட..
நீயாக பேசியதுதானே அதிகம்

நானின்றி நீ இல்லை...
நீயன்றி நான் இல்லவே இல்லை என்றாயே.
பார்த்தவர்கள் எல்லாம்..
இது அருமையான ஜோடிபுறா என்றார்களே

நம் இரு வீட்டிலும் கூட..
நமக்கு எந்த தடையும் இல்லையே
உடுத்தும் உடை கூட ஒரே மாதிரி தானே ..
தோழிகளுக்கு உதாரணமாக இருந்த நாம்..

ஏனடி என்னிடம் சொல்லாமலே மணமுடித்து போனாய் ..
என் உள்ளம் துடிப்பது உனக்கு புரியவில்லையா...

No comments:

Post a Comment