மழலை
உன்னை பார்த்துக்கொண்டே இருக்க
என் மனம் துடிக்கிறதே ..
நீதான் எத்தனை அழகு
உன் துருதுரு பார்வை
அதில் தீட்டிய மை
நீ கண்ணுருட்டி பார்க்கும் பார்வை
உன் சின்ன கால்களின் கொலுசு
உன் மணியோசை சிரிப்பு
என் மனதை கொள்ளை கொள்கிறது
உன் செம்பவள வாய் திறந்து
நீ பேசும் மழலை ..எத்தனை தித்திக்கிறது
உன்னை அள்ளி அணைக்க
என் தாயுள்ளம் ஏங்குகிறது..
சுட்டிப்பெண்ணே நீ என்
கட்டி தங்கமல்லவா ..
உன் பிஞ்சு கரங்களால்
நீ எனை தீண்டும் போது
உலகையே மறக்கிரேனடி நான் ...

No comments:
Post a Comment