Monday, November 29, 2010

மயக்கம்


மயக்கம்

என்னதான் நான் என்னை
மாற்றிக்கொள்ள நினைத்தாலும்
என் மனம் முழுக்க உன் நினைவுப்பூக்கள்..

உன்னுடன் பேசக்கூடாது என்று
என் உதடுகள் கட்டளையிடுகிறது
ஆனால் என் மனம் அதை ஏற்பதே இல்லை..

உன்னை பார்க்ககூடாது என்று
கண்களை மூடிக்கொள்கிறேன்
மூடிய கண்களில் உன்னுருவம்..

நான் காணும், நினைக்கும் அணைத்து
செயல்களிலும் உன்னையே காண்கிறேன்..

நீ என்னை பார்க்கும் போது
என் மனதில் ஏன் தான் இந்த தவிப்போ..

நீ சிரித்துவிட்டால் என்னை கட்டுபடுத்தவே
நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் ..

ஆனாலும் நீ ரொம்ப மோசம்
உன் துருதுரு பார்வையாலேயே
என்னை மயக்கி கட்டிப்போட்டுவிட்டாயே..

உன் அருகில் இருக்கும் போது
என்னையே நான் மறந்து போகிறேன்
என்ன மாயம் செய்தாயோ நீ..

No comments:

Post a Comment