யாதுமாகி நின்றவன்
என் மனதில் ஒரு வெறுமை
நீ பேசியும் சந்தோஷிக்கவில்லை மனது..
ஏன்தான் பிறந்தோம் என்று எத்தனையோ நாட்கள்
உணக்காகவே பிறந்ததாக சில நாட்கள்...
எல்லாம் மாயை என்று இப்போது..
என் நிலை உன் மனதில் என்ன
உன் ஒற்றை வார்த்தையில் புரிய வைத்தாய்...
இதுதான் என் நிலை என்று புரியவைத்தாய்
என் ஆயிரம் கோடி நன்றிகள் உனக்கு...
உன்னை புரிய வைத்தமைக்கு..
உணர்சிகளை கொல்வது எனக்கு புதிதல்ல
என் உணர்சிகளை கொல்ல முடியும்...
ஆனால் சாகும் வரை என் நினைவுகள் உன்னோடு
என்னை மறக்க உன்னால் எப்படி முடிந்தது ..
என்னை என் மனதை நன்கு புரிந்தவன் என்று நினைத்தேன்..
மறுபடி பிறந்தேன் உன்னால்
உடனே இறந்தேன் உன்னால்
என் யாதுமாகி நின்றவனன்றோ நீ....

No comments:
Post a Comment