Saturday, November 27, 2010

இதயத்தின் ஓசை


இதயத்தின் ஓசை

ஏன் இப்படி என்னுள்..
எதற்க்கு இந்த மாற்றம்..

இதயத்தின் ஓசை அடங்கும் முன்னர்
மாற்றம் மாறுமா இதயம் ஓலமிடுகிறது..

என் துடிப்பை நிறுத்திவிடு என்கிறது
மனமது மடிந்திட என்ன செய்ய வேண்டும்..

நினைவுகள் நீங்கினால் சித்தப்ரம்மை அன்றோ
நான் பைத்தியமாவதுதான் உன் விருப்பமா ..

நான் என்ற கர்வம் என்னுள் எங்கோ ஒளிந்துக்கொண்டது
ஒரு சிறு தும்மலுக்கு கூட பயப்படுகிறது மனது..

ஏமாற்றம் என்பது வாழ்கையில் சகஜம்
ஏமாற்றமே வாழ்கையானால் என் சொல்வது

இத்தனைக்கும் காரணம் மாறாத அன்புதான்
காதலுக்குதான் எத்தனை மகத்தான சக்தி..
..............................
.....
ஏன் இப்படி என்னுள்..
எதற்க்கு இந்த மாற்றம்..

இதயத்தின் ஓசை அடங்கும் முன்னர்
மாற்றம் மாறுமா இதயம் ஓலமிடுகிறது..

என் துடிப்பை நிறுத்திவிடு என்கிறது..
நான் இருக்கிறேன் என்கிறது நட்பு

நினைவுகள் நீங்கினால் சித்தப்ரம்மை அன்றோ
உன் நினைவுகளும் என்னை விட்டு நீங்காது

நான் என்ற கர்வம் என்னுள் எங்கோ ஒளிந்துக்கொண்டது
நட்புக்கு முன் அனைத்தும் சமம் என்று புரிகிறது

ஏமாற்றம் என்பது வாழ்கையில் சகஜம்
ஏமாற்றத்தை தடுப்பது நட்பன்றோ

இத்தனைக்கும் காரணம் மாறாத அன்புதான்
நட்புக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி..

No comments:

Post a Comment