Tuesday, November 30, 2010

தாலாட்டு

தாலாட்டு

 
மலை போன்ற சிந்தை கொண்ட
என் குழந்தையே ..

உன் கண்களும் வற்றிவிட்டது
நீயும் சற்று அமைதி பெரு..

நோய்களும் உன்னை கண்கொண்டு
புரமுதுகிட்டோடும் காலம் வரும் ..

அதுவரை நீயும் சற்றே உறங்கு
மனம் அமைதி பெற்று உறங்கு ..

உன் மன காயங்கள் ஆறவே
நானும் இறகு கொண்டு வீசுவேன் ..

சிந்தை கலங்கலாமோ நீ
சீரும் வீரமல்லவோ நீ

வெற்றி பெறவே பிறந்தவனல்லவா நீ
தமிழின் அமுதல்லவா நீ..

சற்றே கண்ணயர நானும் பாடுகிறேன்
தாலாட்டொன்றை கண்ணே நீ கண்ணுறங்கு ..
0

No comments:

Post a Comment