Thursday, September 29, 2011

எனக்கானவன் நீ

எனக்கானவன் நீ 

வாசமான பூங்காற்று நீ
உன் அணைப்பில் எப்போதும் நான் துயில் கொள்கிறேன்..

வசந்தமான நினைவுகள் நீ
உன் நினைவில் எப்போதும் நான் எனை மறக்கிறேன் ..

மாசற்ற பேச்சாளன் நீ
உன் பேச்சின் அழகில் எப்போதும் நான் வழிநடக்கிறேன்..

கம்பீரமான அழகு நீ
உன் அழகின் மயக்கம் எபோதும் நான் உன் மயக்கத்தில்...

தீட்சண்யமான பார்வை நீ
உன் பார்வையின் கூர்மையில் நாணி தலைகுனிகிறேன்..

எனக்கானவன் நீ 
இந்த நினைவு என்னை கவியாக்குகிறது...

No comments:

Post a Comment