Tuesday, December 13, 2011

அன்பின் அடைக்கலம்

அன்பின் அடைக்கலம்


அதிகாலை விழித்தெழல் உன் மார்பில்
கலைந்த என் கூந்தலை உன் கரங்களும்...

சற்றே ஒதுக்கிவிட ....
கண் இமை திறந்தால் நாணம் வரும் விலக நேரிடும் ..
அன்பே நான் கண்  விழிக்க மாட்டேன்

பூ போன்ற பொக்கிசமான  வாழ்க்கை
அதிகாரம் வேண்டாம் ஆணவம் வேண்டாம்
அன்பால் ஆட்சி செய்வோம் நமக்குள்
மாட  மாளிகை வேண்டாம்... அரிதான நகைகள் வேண்டாம்
அறுசுவை விருந்தும் வேண்டாம்...

அன்பான உன் கரங்களின் தீண்டல் போதும்
கனிவான உன் பார்வை.... அது சொல்லும் நேசம் போதும்
உன் எண்ணம் என்  செயலாக...உணதாளுகையின் கூட்டுக்குள் அடைக்கலமாக....

.

No comments:

Post a Comment