Sunday, September 25, 2011

கனவின் எதிரொலி

கனவின் எதிரொலி

சுகமான நித்திரை அதில் வரும் கனவு
விடிந்தால் மடிந்துவிடும் ..

நிச்சலனமான சிந்தனை அதில் வரும் நினைவுகள்
கண்ணெதிரே  தோன்றும் காட்சிகள்
அத்தனையும் மாயையோ ..

மேகம் திரண்டு வரும்போது போடும்  தூறல்
சற்று நேர மகிழ்ச்சிதானே ..
மழை மேகங்களே எனக்காக மறுபடி வாருங்கள்

காத்திருப்பு தேயும் போது காலங்கள் மாறும்
ஆனால் எப்போதும் மாறாதது
மனதில் தோன்றும் அன்புக்காதல்

கடமை அனைவருக்கும் உண்டு
அதனுடன் வாழ்வது வாழ்க்கை ..

கடல் அலை ஓய்ந்த பின் குளிக்க நினைப்பது
எப்படி சாத்தியமாகும் ..

வாழும் காலமோ சிறிது
அதனை முழுமையாக வாழவேண்டும்...

சுகமான நித்திரை அதில் வரும் கனவு
கனவை கலையாமல் அரங்கேற்றுவோம் ..



No comments:

Post a Comment