எங்கே நீ
மதிய வெயில் நேரத்தில் சிறு காற்றாய் நீ வந்தாய்
கண்மூடி சிலிர்க்கும் முன் கானல் நீராய் மறைந்ததேன்...
தாகம் தீர்க்கும் குளிர் நீராய் நீ வந்தாய்
நா வறட்சி தீருமுன் எங்கே போனாய் நீ..
பசி நேர அமுதாய் நீ வந்தாய்
கையிலெடுக்குமுன் ஏன் அதை பறித்தாய்..
உன் நினைவில் வாடும் போது ஓடி வந்த நீ
கண்திறந்து பார்த்தல் அது கனவென்று எங்கே போனாய்..
சின்ன சிணுங்கலுடன் சிரிக்கும்போது எனை பார்த்த நீ
நிரந்தரமாக என் சிரிப்பை எங்கே மறைத்தாய்...
அன்பால் என் மனதில் இடம் பிடித்த நீ
அன்புக்கு ஏங்கும் எனைவிட்டு எங்கே போனாய் இப்போது ..
என்னை இழக்கும் உன்னை நான் என்ன சொல்ல
உன் சந்தோசம் இதுவானால் தடையென்ன சொல்ல..

No comments:
Post a Comment