அன்பின் மொழி
நித்தமும் நினைத்திருக்க நினைவில் இனித்திருக்க
கண்களால் கதை பேச...
மௌன மொழி வியாபித்திருக்க
இனிய மொழியே...நீ... என் மௌன மொழியானாய்
உன்னை நினைத்தே நான் வாழ்கிறேன்
என் மனம் அமைதியானது எளிமையானது
தெளிவான சிந்தனைகள் அழகான கற்பனைகள்
ஆத்மார்த்த காதல் களங்கமில்லாத கவிதை
மெல்லிய மனம் அதில் ..அதிகம்
அன்பை மட்டுமே ஆதாரமாக கொண்டவள்
அன்பை மட்டுமே யாசிப்பதால் ....
கொடிய நோயான சந்தேகம் அண்டாதவள் ...
உன்னில் பாதியானவள் உன்னவள்..
உன் கண்களின் மொழி அறிந்தவள்

அன்பின் மொழி அறிந்தேன்...அருமை
ReplyDelete