Sunday, March 13, 2011

கவிதையின் பிறப்பு

கவிதையின் பிறப்பு

சில்லென்ற காற்று மனதையும் உடலையும்
வருடுகிறது எண்ணங்கள் சுகமானதாக பிறக்கிறது..

அண்டை வீட்டில் தீப்பற்றி எரிகிறது
எண்ணங்களுக்கு ஏது நேரம் சிந்திக்க..

உருக்கமான கதை படிக்கிறோம் அதன் தாக்கம்
சற்று சோகமான எழுத்துக்கள் தோன்றுகிறது..

கண்ணெதிரே நடந்த சோகமான தாக்கம்
அதன் வடிகால் மனதை உருக்கும் எழுத்துக்களாக உருமாறுகிறது..

இவை அத்தனையும் எழுதுபவரின் கற்பனைகள்தாம் அன்றி
அதை அவருடனே கலந்தால் எப்படி..

அனைத்து கவிதைகளும் கற்பனையின் ஊற்றுக்கலன்றோ
அது பிறக்கும் இடத்தை பொருத்து மட்டுமே மாறுபடுகிறது..

ஒவ்வொரு கவிதையின் பிறப்பும்
வித்யாசமான சூழலில் பிறக்கும் எண்ணக் குழந்தையன்றோ...

No comments:

Post a Comment