Sunday, December 25, 2011

என் காதல்

என் காதல்

கனவுகளின் சாட்சிகளை சொல்லவா????

இல்லை ....
கவிதைகளின் வரிகளை சொல்லவா????

இல்லை ....
மௌனத்தின் வாசலை சொல்லவா????

இல்லை .....
என் தவிப்புகளை சொல்லவா????

இதில் ....

எதைச்சொல்லி புரிய வைப்பேன்.......
என் காதலை !!!!!

Thursday, December 22, 2011

மாற்றம்

மாற்றம்

என் அருகில் நீ இல்லாதது மிகவும் வெறுமை
ஏனிந்த மாற்றம் என்ன செய்தாய் நீ..

உன் கனிவான பேச்சு சிலையாகிபோகிறேன் நான்
உன் இதழ் அமுதம் இன்னும் இன்னும் ......

ஏனிந்த மாற்றம் உன் நினைவில் நான்
மனதில் மாற்றம் இதழில் சிரிப்பு

கண்களில் மயக்கம் காதலின் நினைவு
உன் நெஞ்சில் என் விடியல்...

உன் அணைப்பு மீண்டும் கருவறை
உன் நினைவு என்னை வாட்டுகிறது..

ஏனடி பெண்ணே நீ
என்னதான் செய்தாய் என்னை .......

 

Tuesday, December 13, 2011

அன்பின் அடைக்கலம்

அன்பின் அடைக்கலம்


அதிகாலை விழித்தெழல் உன் மார்பில்
கலைந்த என் கூந்தலை உன் கரங்களும்...

சற்றே ஒதுக்கிவிட ....
கண் இமை திறந்தால் நாணம் வரும் விலக நேரிடும் ..
அன்பே நான் கண்  விழிக்க மாட்டேன்

பூ போன்ற பொக்கிசமான  வாழ்க்கை
அதிகாரம் வேண்டாம் ஆணவம் வேண்டாம்
அன்பால் ஆட்சி செய்வோம் நமக்குள்
மாட  மாளிகை வேண்டாம்... அரிதான நகைகள் வேண்டாம்
அறுசுவை விருந்தும் வேண்டாம்...

அன்பான உன் கரங்களின் தீண்டல் போதும்
கனிவான உன் பார்வை.... அது சொல்லும் நேசம் போதும்
உன் எண்ணம் என்  செயலாக...உணதாளுகையின் கூட்டுக்குள் அடைக்கலமாக....

.