மையல்
கண்ணுக்கழகாய் பட்டாடை நீ உடுத்திட்டாய்
கூந்தலிலே மல்லிகையும் சரமாட
கைவளை தான் கலகலப்பை கூட்டிடுதே..
உள்ளத்து சிரிப்போடு வீட்டில் நீ வளம் வந்தாய்
மனம் கொள்ளா மகிழ்வோடு உன் முகம் மலர்ந்திடவே
சமையலிலும் உன் கை மணம் வீசுகிறதே ..
அடிக்கடி கண்களும்தான் கண்ணாடியை பார்க்கிறது
நிலை கொள்ளா இருப்போடு கடத்திட்டாய் நேரமதை
மனம் கொண்ட காதலனும் பெண் பார்க்கும் படலமதோ..
கண்ணுக்கழகாய் பட்டாடை நீ உடுத்திட்டாய்
கூந்தலிலே மல்லிகையும் சரமாட
கைவளை தான் கலகலப்பை கூட்டிடுதே..
உள்ளத்து சிரிப்போடு வீட்டில் நீ வளம் வந்தாய்
மனம் கொள்ளா மகிழ்வோடு உன் முகம் மலர்ந்திடவே
சமையலிலும் உன் கை மணம் வீசுகிறதே ..
அடிக்கடி கண்களும்தான் கண்ணாடியை பார்க்கிறது
நிலை கொள்ளா இருப்போடு கடத்திட்டாய் நேரமதை
மனம் கொண்ட காதலனும் பெண் பார்க்கும் படலமதோ..

