Monday, April 25, 2011

அடி பெண்ணே

அடி பெண்ணே

மனதிலே ஒரு பாடல் ..
நினைவிலே  அதன் தாக்கம்..
 
என் நெஞ்சுக்குள்  ஒரு சோகம்
இதழ்களில் இதழ் பூக்கும்..
 
தென்றலின் சிறு காற்றும்
என்னை தழுவிடும் இந்நேரம்..
 
உன் சுவாசம் என்னோடு
என் சுவாசமும் உன்னோடு...
 
காரணமின்றி அழுகை  
மனதில் ஒரு அழுத்தம்....
 
கண்ணயரும் துளி நேரம்
கண்ணீரும் வற்றாதோ...
 
எண்ணங்கள் விட்டேற்றியாக
ஏனோ எதிலும் மனம் பதியவில்லை...
 
உன் நினைவுகளும் என்னை விட்டு பிரிவதில்லை
உன் தாக்கம் என்னுள் எப்போதும் ...

அடி பெண்ணே...
காதல் சற்றும் கண்னயராதோ...

 

Monday, April 4, 2011

நானும் காத்திருக்கிறேன்

நானும் காத்திருக்கிறேன்
 
நானும் காத்திருக்கிறேன் 
உன் வழிப்பாதையை பார்த்து..

நானும் காத்திருக்கிறேன்  
உன்னிடமிருந்து  வரும் சிறு மொழிக்காக..

 நானும் காத்திருக்கிறேன்
உன் கனிவான பார்வைக்காக...

 நானும் காத்திருக்கிறேன்
உன் இதமான அரவணைப்புக்காக..

 நானும் காத்திருக்கிறேன்
 எனக்காக நீயும்  காத்திருப்பாய் என்று ..

நானும் காத்திருக்கிறேன்
உனக்கே உனக்காக.. உன் ஒரு சொல்லுக்காக...

நானும் காத்திருக்கிறேன் 
என்னவளே நீ எங்கே...